64
மின்னல் தாக்கியதில் ஆறு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், சிலருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் இந்த சம்பவம் எத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எத்திமலே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட பொரலுவெல்லே கீர்த்தி பால என்ற 65 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். வயலில் மின்னல் தாக்கிய பின்னர் கடும் காயங்களுடன் அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.