Friday, May 17, 2024
Home » சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ. 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ. 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

by sachintha
April 30, 2024 7:09 am 0 comment

முஷாரப் எம்.பிக்கு பாடசாலை அபிவிருத்தி குழு நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

அண்மையில் பாடசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு முன்வைத்த கோரிக்கைக்கமைவாக அவர் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் அவரது இணைப்புச் செயலாளரும் பாடசாலை பழைய மாணவருமான ஏ.எம். அஷாம் மெளலவி ஆகியோருக்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோர் சார்பாக அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், நிதி ஒதுக்கீட்டிற்கான வேலைகளை விரைவாக ஆரம்பித்து, நிறைவு செய்வதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற சாய்ந்தமருது பிரதேச செயலாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர் விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை விசேட, சாய்ந்தமருது விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT