மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய வானொலியைக் கண்டுபிடித்த இத்தாலி விஞ்ஞானியான, குக்லிமோ மார்க்கோனியின் 150 ஆவது நினைவு தினத்தையொட்டிய விசேட நினைவு நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.
அவரது 150ஆவது நினைவு தினத்தையொட்டிய விசேட ஞாபகார்த்த முத்திரை, முதல் தபால் உறை வெளியிடும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
1930 ஆம் ஆண்டு மார்க்கோனி சுற்றுலாவை மேற்கொண்ட நாடான இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையில் நிலவும் பலமான மற்றும் நீண்ட கால நட்புறவை நினைவு கூரும் வகையில், இந்த விசேட முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.