நிலைபேறான வலுசக்தி மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் ஒரு கூட்டமைப்பான, இலங்கை நீல பச்சைக் கூட்டணியானது (Sri Lanka Blue Green Alliance), இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான முதலீடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவாறு, இலங்கை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தது.
இலங்கை நீல பச்சைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ராஜித அபேகுணசேகர இங்கு தெரிவிக்கையில், ‘பசுமைப் பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தியை மேம்படுத்துவதே எமது அமைப்பின் பிரதான நோக்கமாகும். ஒரு தீவு நாடாகிய நாம் எமது இயற்கை வளங்களை உச்ச பயன்பாடு மிக்கதாக பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இந்த விடயத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மிகவும் முக்கியமானதாகும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் பல விடயங்கள் பேசப்பட்டன.
தேசிய மின்கட்டமைப்பில் 50 MW வலுவை சேர்ப்பதற்கான திட்டத்திற்கான விலைமனு கோரலை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளதால், அதானி குழுமத்தின் 500 MW திட்டத்தை தாமதப்படுத்துமாறு கபீர் ஹாசிம் எம்.பி பாராளுமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்த விலைமனு கோரல் மூலம் ஒரு அலகிற்கு 0.7 டொலர் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக தான் தெரிந்து கொண்டதாக கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தார்.