Tuesday, May 21, 2024
Home » கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு

-22 வருடங்களின் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு

by sachintha
April 30, 2024 9:36 am 0 comment

கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பிரதேசத்தில் 22 வருடங்களுக்கு முன்னர், நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 22 வருடங்களின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால்,மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படுகொலைச் சம்பவம் 2022 ஆகஸ்ட் (08) ஐந்துலாம்புச் சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இக்குற்றவாளிகள் இருவருக்கும் எதிரான முறைப்பாடுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் ,சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இந் நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அத்துடன், இவ்வழக்கின் இரண்டாவது மற்றும் நான்காவதுமான பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சின்னையா நடேசன் என்ற நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றம் தொடர்பில்,இந்நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT