Saturday, May 4, 2024
Home » இந்தியாவின் ITC ரத்னதீப ஹோட்டல் இன்று திறப்பு

இந்தியாவின் ITC ரத்னதீப ஹோட்டல் இன்று திறப்பு

by Prashahini
April 25, 2024 12:01 pm 0 comment

காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே மேற்கொண்ட பாரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும்.

5.86 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐடிசி ரத்னதீப விருந்தகம் மற்றும் அதிசொகுசு ரக வீட்டுத் தொகுதி 48 மாடிகளைக் கொண்டுள்ளது.

அத்துடன், அதன் உயரம் 224 மீற்றர் என்பதுடன், 352 அதி சொகுசு ரக அறைகள் காணப்படுகின்றன. இந்த விருந்தகம் 2 கட்டடங்களுக்கிடையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை பிரிட்ஜ் எனப்படும் வான் பாலமொன்றினால் இணைக்கப்பட்டுள்ளமை அதன் தனிச் சிறப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT