Saturday, May 18, 2024
Home » யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

- மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தாயார் தெரிவிப்பு

by Prashahini
May 4, 2024 11:28 am 0 comment

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் , பெண்ணின் வீட்டாருக்கும் மகளின் காதல் தொடர்பு தெரிந்து இருந்தமையால் , காதலி வீட்டிற்கு காதலன் சுதந்திரமாக வந்து செல்வது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காதலியின் வீட்டில் தூக்கி தொங்கிய நிலையில் காதலன் சடலமாக காணப்பட்டதில் , தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக இளைஞனின் தாயார் மரண விசாரணையில் தெரிவித்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT