Tuesday, May 21, 2024
Home » தமிழ் பொதுவேட்பாளர்: சர்வதேச சமூகத்துக்கு சிறந்த செய்தியாகும்

தமிழ் பொதுவேட்பாளர்: சர்வதேச சமூகத்துக்கு சிறந்த செய்தியாகும்

by Rizwan Segu Mohideen
April 30, 2024 9:03 am 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினால், சர்வதேச சமூகத்துக்கு செய்தி ஒன்றை சொல்லக் கூடியதாக இருக்குமென பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 18 இலட்சம் தமிழ் வாக்குகள் உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது ஒற்றுமைக்கு வழிகோலும். இது, சர்வதேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல உதவும். கிளிநொச்சி நாதன் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் (28) பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே, சிறீதரன் எம்பி,இதனைத் தெரிவித்தார்.

காலத்திற்கு காலம் ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினோம். நாம் ஆதரவு வழங்கிய சிலர் வெற்றியீட்டினர். ஆனால்,எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கென தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தேவை. இது, தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT