159
அட்டாளைச்சேனை பிரதேச கழகங்களுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகளில் உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்தில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் கழக அணிகள் வெற்றியீட்டின.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (26) விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ. இம்றுபஸ்கான் தலைமையில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் அணி 2 — 1 என்ற கோல்கள் (தண்டனை உதைகள்) மூலம் அட்டாளைச்சேனை சேபர் அணியை வென்றது. கரப்பந்தாட்டத்தில் அந்த அணி 2–1 என அட்டாளைச்சேனை அஷ்ரப் அணியை வீழ்த்தியது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்