Tuesday, May 21, 2024
Home » வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

by sachintha
April 30, 2024 8:01 am 0 comment

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்பை வழங்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நேற்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா’, ‘எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது’, ‘அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமக்கான வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜரொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அதேவேளை கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT