இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.
இந்த இளையோர் அணிகள் எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் முக்கோணத் தொடர்களில் ஆடவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மற்றும் காலியில் நடைபெறவிருப்பதோடு இதில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு டி20 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடும். இதில் டி20 தொடர் மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு ஒருநாள் போட்டிகள் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகும். இந்த இரு தொடர்களிலும் அதிக புள்ளிகளை பெறும் அணி அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.