Monday, May 20, 2024
Home » சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மாணவி

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மாணவி

by mahesh
May 8, 2024 9:20 am 0 comment

கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றியீட்டி சர்வதேச போட்டிக்கு தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவி எம்.எச்.அய்னிபதுல் அண்மையில் பாடசாலை சமூகத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

மேற்படி வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் ஏ.ஜே.மர்சூக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றமீஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உட்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையிலிருந்து தேசியமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட எம்.எச்.அய்னிபதுல், சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்குக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT