Sunday, May 19, 2024
Home » திருக்கோவிலில் நாற்பது குடும்பங்களுக்கு நிதி உதவி

திருக்கோவிலில் நாற்பது குடும்பங்களுக்கு நிதி உதவி

by mahesh
May 8, 2024 9:20 am 0 comment

அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சியான நிதி உதவி இஸ்லாமிய ரீலீப் நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று மேற்படி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக இந்த உதவி வழங்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, பாடசாலை செல்லும் பிள்ளைகளுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இஸ்லாமிய ரீலீப் நிறுவனத்தினூடாக கனடா இஸ்லாமிய ரீலீப் நிறுவனத்தால் இந்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மேற்படி 40 குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் தொடக்கம் இரண்டு இலட்சம்வரை முதற்கட்ட நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

திருக்கோவில் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT