121
சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத் தலைவர் வைத்தியர் ஆர். சிறிகிருஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதேச பாரம்பரிய மருத்துவத்தை அபிவிருத்தி செய்தல், மூலிகை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டன.
புதிய காத்தான்குடி தினகரன், மணல்சேனை நிருபர்கள்