ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவுக்கு விதித்த தடை உத்தரவுக்கு, எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு நேற்று ( 07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது, நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம், 10 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, பதில் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து , கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்தது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.