Sunday, May 19, 2024
Home » இலங்கை வங்கியின் ‘பிட்ட பிட்ட ரட்ட தாகி’ வெற்றியாளருக்கு வீடுகள் கையளிப்பு

இலங்கை வங்கியின் ‘பிட்ட பிட்ட ரட்ட தாகி’ வெற்றியாளருக்கு வீடுகள் கையளிப்பு

by mahesh
May 8, 2024 8:30 am 0 comment

இலங்கை வங்கியானது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு ஆடம்பர வீடொன்றைப் பரிசளித்து தனது புகழ்பெற்ற ‘பிட்ட பிட்ட ரட்ட தாகி’ நிகழ்ச்சித்திட்டத்தின் அண்மைய பகுதியை நிறைவுசெய்தது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பரிசுத் திட்டத்தின்கீழ் வீடொன்றைப் பரிசாக வழங்கும் முதல் வங்கி என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டது.

புலம்பெயர் தேசங்களில் அரும்பாடுபட்டு உழைத்த வெளிநாட்டு நாணயத்தை பாதுகாப்பாக தமது குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் அனுப்பும் எமது புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்குமுகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரிசுத்திட்டம் இவ்வாறு இனிதே நிறைவுற்றது.

இலங்கை வங்கியின் மூன்றாவது பகுதியான ‘பிட்ட பிட்ட ரட்ட தாகி’ பரிசுத் திட்டம் வெளிநாடுவாழ் எம்மவர்க்கு உச்சபட்சமாக ரூ. 30 மில்லியன் பெறுமதியான வீடு உட்பட தினசரி, வாராந்த மற்றும் மாதாந்த குலுக்கல்களில் பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியது. பரிசுகளை வெல்வதற்கான பல வாய்ப்புகள் இத்திட்டத்தில் இருப்பதால் வீட்டை வெற்றிபெறும் அதிர்ஷ்டசாலி யார் என்ற அறிவிப்புக்காக பங்கேற்பாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

கடுமையான தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து, கே.கே. ருவான் சிந்தக்க என்பவரை 30 மில்லியன் பெறுமதியான தளவாடங்களுடனான வீட்டை வெல்லும் வெற்றியாளராக அறிவிப்பதில் இலங்கை வங்கி பெருமகிழ்ச்சியடைகிறது.

2024.04.28ஆம் திகதி கட்டுநாயக்காவின் ‘மிலேனியம் சிட்டி – றிவர் வியூ’ பகுதியில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்வில் பெரும் ஆரவாரங்களுக்கும் கைதட்டல்களுக்கும் மத்தியில் சிந்தக்க தனது புதிய வீட்டின் சாவியைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT