Thursday, May 9, 2024
Home » பங்களாதேஷ் அணி வீரருக்கு அபராதம்

பங்களாதேஷ் அணி வீரருக்கு அபராதம்

by manjula
March 12, 2024 6:04 am 0 comment

இலங்கைக்கு எதிராக கடந்த சனிக்கிழமை (09) நடைபெற்ற மூன்றாவது ரி20 சர்வதேச போட்டியின்போது ஐ.சி.சி. நடத்தை விதியை மீறிய பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் தௌஹீத் ஹ்ரிதோயுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 28 ஓட்டங்களால் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணி தொடரை 1–2 என இழந்தது.

பங்களாதேஷ் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் ஹ்ரிதோய் ஆட்டமிழந்து அரங்கு திரும்பும்போது இலங்கை வீரர்கள் மீது கோபத்தை வெளியிட்டிருந்தார். தனது தவறை ஒப்புக்கொண்ட அவர் தண்டனையையும் ஏற்றுள்ளார். இதன்போது ஹ்ரிதோயுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கள நடுவர்கள், மூன்று மற்றும் நான்காவது நடுவர்களே இது தொடர்பில் முறைப்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT