77
காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி மர்க்கஸ் சாஆத் இஸ்லாமிய்யா அரபுக் கல்லுரியின் அபிவிருத்திக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ரூ.07 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அரபுக் கலாசாலையை மேம்படுத்தும் பொருட்டு கல்லூரி அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து இத்தொகையை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிதியின் ஊடாக தற்போது கல்லூரி மண்டபத்திற்கு மின்விசிறிகள் மற்றும் மின்சார உபகரணங்களை பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை விசேட நிருபர்