55
மத்திய மாகாண வத்தேகம கல்வி வலய பன்விலை விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீவிக்னேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி பாடசாலை அதிபர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பாடசாலையின் பழைய மாணவரும் சமூக சேவகருமான பிரபாகரனின் பூரண அனுசரணையிலும் பெற்றோர், ஆசிரியர், நலன் விரும்பிகளின் பெரும் பங்களிப்புடனும் புதிதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.
புசல்லாவை தினகரன் நிருபர்