Monday, May 20, 2024

ஊழியர் சேமலாப நிதி சட்டத் திருத்தம்; சுமந்திரன் எம்.பி தனி நபர் பிரேரணை

by mahesh
May 8, 2024 7:15 am 0 comment

ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

அதற்கிணங்க 1958 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேற்படி இப்பிரேரணையை நேற்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி: நாட்டின் பாரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் செயற்படுகிறது. அதில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது அவசியம். இதன்படி இத்திருத்தம் ஊடாக மாதாந்தம் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT