போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 67 சந்தேக நபர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டக்களப்பின் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம், கசிப்பு விற்பனை, கசிப்பு உற்பத்தி, சட்டவிரோத சாராய விற்பனை, ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களே கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து கசிப்பு பரல்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும், அவர் கூறினார்.
ஏற்கெனவே பிணை வழங்கப்பட்ட மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் அடங்கலாக இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சந்தேக நபர்களிடம் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்