சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள சில அமைப்புகளுக்கு நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமால் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியே சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த சில அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள், பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மதஸ்தலங்கள், மாதர் சங்கங்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கம், பொது நிறுவனங்கள் ஆகியவை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிடம் விடுத்த நீண்டகால கோரிக்கைக்கமையவே இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்குரிய ஆவணங்களை பைசால் காசிம் எம்.பி. வழங்கி வைத்தார்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன், சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்கள்