Tuesday, April 30, 2024
Home » குற்றமிழைத்த 610 சாரதிகள் இனங்காணப்பட்டு எச்சரிக்கை

குற்றமிழைத்த 610 சாரதிகள் இனங்காணப்பட்டு எச்சரிக்கை

பெப்ரவரி முதல் கடும் நடவடிக்கை

by damith
January 30, 2024 6:45 am 0 comment

வீதிகளில் விசேட கமரா கட்டமைப்புக்களை பொருத்தியுள்ள நிலையில், கொழும்பு நகர்ப்புறத்தில் வாகன போக்குவரத்தின் போது, குற்றமிழைத்துள்ள 610 சாரதிகள் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக இவ்வாறு இனங்காணப்பட்ட நபர்களுக்கு தண்டனைப்பத்திரம் வழங்காது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தாகவும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் போக்குவரத்து செயற்பாடுகளின் போது, குற்றமிழைக்கும் சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்..

கடந்த 22 முதல் கொழும்பு நகருக்குள் வாகனங்களை செலுத்தும் போது குற்றமிழைப்போரை இனங்காண்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு ள்ளது. அந்தவகையில் கொழும்பு நகரின் அனைத்துப் பிரதேசங்களிலும் 108 சிசிரிவி கமரா தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலையில், பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமையின் மூலம், கொழும்பு நகரின் வீதி சட்டங்களை மீறும் ஏனைய பிரதேச நபர்களுக்கும் தண்டப்பத்திரம் வழங்கப்படுமென்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT