செல்லக்கதிர்காமம் — கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து, மேலும் நால்வர் காயமடைந்தனர்.
செல்லக்கதிர்காமத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நேற்று முன்தினம் இரவு (28) பயணித்த வேன் ஒன்றே, இவ்வாறு கோர விபத்துக்குள்ளாகியது.
கதிர்காமம் நோக்கி பயணித்த வேன், பசரயாய என்ற சந்திக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. பின்னர்,வீதியில் வந்துகொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பாரவூர்தியுடன் இந்த வேன் மோதி வீதியை விட்டு விலகி புளியமரத்தில் மோதியது. இந்த வேனில் ஆறு இளைஞர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.