Monday, May 20, 2024
Home » டயனாவின் வெற்றிடத்துக்கு பெண் ஒருவரையே நியமிக்கவும்

டயனாவின் வெற்றிடத்துக்கு பெண் ஒருவரையே நியமிக்கவும்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை

by Gayan Abeykoon
May 10, 2024 10:05 am 0 comment

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரி, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பிவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.   இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை கேள்விக்குட்ப டுத்தவில்லை.   இத்தீர்ப்பினால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் குறைவடைந்துள்ளார்.இது,ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.   பெண்களின் அனுபவம், அறிவு மற்றும் எதிர்கால சிந்தனை என்பன சமூகத்திலுள்ள சகலருக்கும் பயனளிக்கும் வகையிலான கொள்கைகளை வகுப்பதில் பங்களிக்க வேண்டும். பயனுள்ள ஜனநாயகத்திற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நீக்கப்பட்டதால், ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை குறைக்க முடியும் என்பதுடன், பாராளுமன்றத்தில் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT