Tuesday, April 30, 2024
Home » அரசியல்வாதிகளை அழைப்பதை அவசரமாக நிறுத்த வேண்டும்
பல்கலைக்கழக விரிவுரைகள்

அரசியல்வாதிகளை அழைப்பதை அவசரமாக நிறுத்த வேண்டும்

by damith
January 30, 2024 7:00 am 0 comment

பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை வரவழைப்பதற்கு சில பல்கலைக்கழகங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை உடனடியாக நிறுத்துவது அவசியமென்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்காக வெளியிலிருந்து விரிவுரையாளர்களை வரவழைப்பது தொடர்பில், பல்கலைக்கழகத்தின் கல்விமான்கள் சபையே தீர்மானிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தை அரசியல்மயமாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலே,இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT