நீதியமைச்சர் விஜேய தாச ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் மே 02 இல், விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதை இடைநிறுத்தும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவை இடைநிறுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே, அவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் வரும் மே 02 இல், முன்னெடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பதவியை வகிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.இதையடுத்து கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கூடிய அந்த கட்சியின் மைத்திரி தரப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை பதில் தலைவராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்