கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நேற்று (16) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை புதிய வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அப்பகுதி கல்விச் சமூகத்தினர் நேரில் வந்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
காரைதீவைச்சேர்ந்த இவர் 2009 இல் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் ஆசிரிய நியமனம் பெற்றதுடன் கல்விச்சேவையில் இணைந்துகொண்டார்.
அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் வகுப்புக்கு 2021ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(காரைதீவு குறூப், பெரியபோரதீவு தினகரன், துறைநீலாவணை நிருபர்கள்)