Tuesday, May 21, 2024
Home » ரஷ்யாவில் விசேட வலய பாதுகாப்பு கருத்தரங்கு; சரத் வீரசேகர எம்.பி, பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

ரஷ்யாவில் விசேட வலய பாதுகாப்பு கருத்தரங்கு; சரத் வீரசேகர எம்.பி, பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

by sachintha
April 30, 2024 10:07 am 0 comment

ரஷ்யாவில் நடைபெற்ற விசேட வலய பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் தொடர்பான கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர பங்கேற்றுள்ளார்.

ரஷ்யாவில் விசேட வலய பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் தொடர்பான கருத்தரங்கு ரஷ்ய அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் பிரத்ரசோவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு நிகழ்வில் இலங்கையின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கலந்து கொண்டிருந்தார். ரஷ்யாவில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் பிராந்திய மற்றும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் பொறுப்புமிகுந்த ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக பட்ருஷேவ் காணப்படுகின்றார். செயலாளர் பட்ருஷேவின் விசேட அழைப்பின் பேரிலேயே பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் தலைவரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோர் ரஷ்யா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் இருதரப்பு உறவு பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், ஜெனீவாவில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ரஷ்ய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர், தாங்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார்.

றிசாத் ஏ. காதர்…

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT