சம்மாந்துறைப் பிரதேசத்தில் பணியாற்றும் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களின் நலன்கருதி “சம்மாந்துறை மீடியா போரம்” எனும் அமைப்பு உதயமாகியுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாட் ஏ. காதரின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் தலைவராக எம்.ஐ.பீ. பௌஸ்தீன், உப தலைவர்களாக கலாநிதி எஸ்.எல். றியாஸ், எம்.ஐ.எம்.ஜலீல், பொதுச் செயலாளராக ஏ.ஜே.எம். ஹனீபா, உப செயலாளராக நௌஷாட் ஏ. கரீம், நிர்வாகச் செயலாளராக எம்.எச்.எம்.ஹாரீஸ், இணைப்புச் செயலாளராக கியாஸ் ஏ. புஹாரி, பொருளாளராக யூ.எல்.எம். றியாஸ், ஆலாசனை சபை உறுப்பினர்களாக மன்சூர் ஏ. காதிர், இர்ஸாட் ஏ. காதர், என்.எம்.புஹாத், போசகர்களாக கலாபூசணம் மாறன் யூ. செயின், கலாபூசணம் யூ.எல். அலியார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல். இஸ்ஹாக், எஸ்.எம்.எம். ஜவாத், எம்.சி. அன்சார், எம்.ஐ.எம். சாக்கீர், ஏ.ஜீ.எம். பிரோஸ், சீ.எம்.எம். தாரீக் முஹம்மட், மிஸ்பாஉல் ஹக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)