Tuesday, April 30, 2024
Home » முக்கிய தேவைகளை கருத்திற் கொண்டே வாகன இறக்குமதிக்கு அரசு அனுமதி

முக்கிய தேவைகளை கருத்திற் கொண்டே வாகன இறக்குமதிக்கு அரசு அனுமதி

வெளிநாட்டுக் கையிருப்பு 5 பில்லியன் டொலரை விட அதிகரிப்பு - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

by mahesh
April 17, 2024 1:00 pm 0 comment

முக்கியமான அவசியத்தை கருத்திற் கொண்டு அதனைப் பின்பற்றிய முறைமைக்கு இணங்கவே வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதியைக் கோரி வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள வேண்டுகோளை கவனத்திற்கொண்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் அவசியத்தை கருதியே வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் கையிருப்பை கவனத்திற் கொண்டே அரசாங்கம் வாகன இறக்குமதிக்கான அனுமதியை உடனடியாக வழங்காமலுள்ளது. எதிர்காலத்தில் அவசியத்தேவைகளை கருத்திற் கொண்டு அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கையிருப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை விட அது தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT