92
ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஜனரஞ்சக விளையாட்டு நிகழ்வு அண்மையில் மட் / ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் சங்கத்தின் தலைவர் யூ.எல்.சுபைதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், மட்டு.பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஷாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)