சட்டவிரோதமாக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் கடலில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையில் ஒரு வெளிக்கள இயந்திரப்படகில் சென்ற ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இவர்களை கடற்படையினர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர். இவர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(தலைமன்னார் விசேட நிருபர்)