முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான மனிதன் வசித்து வருகின்றார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தை கொண்டிருக்கின்றார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருக்கின்றார். இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.
தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.இலங்கையில் தனது கால்களின் நீளத்துக்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஓமந்தை விஷேட நிருபர்)