Tuesday, May 21, 2024
Home » டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 இல் சிறந்த செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 இல் சிறந்த செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு

by Rizwan Segu Mohideen
April 30, 2024 12:02 pm 0 comment

டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 நிகழ்வை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 140 இற்கும் அதிகமான சிறப்பாக தமது பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்த விற்பனை பங்காளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார், குருநாகல் – நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ், கிளிநொச்சி – சண்முகம் ஸ்ரோர்ஸ், உடுப்பிட்டி – எமரல்ட் ஹார்ட்வெயார் மற்றும் கட்டுநேரிய – ஹன்சிக ட்ரான்ஸ்போர்ட் ஆகியன 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தன.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிறைவேற்று முகாமைத்துவ அணியினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். தயானந்தன், ஆலோசனைப் பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ மற்றும் சந்தைப்படுத்தல் குழும பொது முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து விற்பனையாளர்கள் இந்நிகழ்வில் ஒன்றிணைக்கப்பட்டு, நினைவில் நிலைத்திருக்கும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், முழு விற்பனை வலையமைப்பின் அர்ப்பணிப்பான செயற்பாட்டையும் பாராட்டியிருந்தார். வியாபார செயற்பாடுகளின் வரலாற்றில் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் விற்பனை பங்காளர்களின் ஒப்பற்ற ஆதரவுடன் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு முடிந்ததாக குறிப்பிட்டார். நாட்டில் நிலவிய கடினமான பொருளாதார சூழ்நிலை தொடர்பில் ஞானம் குறிப்பிடுகையில், தளம்பல்களுடனான சந்தைப்படுத்தல் சூழலிலும், டோக்கியோ சீமெந்தினால், தேசிய கடமையை பூர்த்தி செய்ய முடிந்ததுடன், சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்ய முடிந்தது. நிறுவனத்தின் விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் ஆதரவினால் எம்மால் இதனை நிறைவேற்ற முடிந்ததாக கூறினார்.

வருடாந்த விநியோகத்தர் மாநாடு என்பது, நாடு முழுவதிலும் காணப்படும் டோக்கியோ சீமெந்து விற்பனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் பிரதான நிகழ்வாகும். டோக்கியோ சீமெந்தின் நம்பிக்கையை வென்ற உயர் தரமான சீமெந்து வகைகள், கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர் பொருட்கள் போன்றவற்றை விற்பனை விநியோகத்தில் அவர்கள் எய்திய சாதனைகளை கொண்டாடும் நிகழ்வில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்து தனது விநியோக வலையமைப்புடன் இணைந்து பெருமைக்குரிய வர்த்தக நாமத் தெரிவுகளை விநியோகிக்கின்றது. இதில், நிபொன் சீமெந்து, டோக்கியோ சுப்பர், நிபொன் சீமெந்து ப்ரோ மற்றும் அற்லஸ் சீமெந்து மற்றும் டோக்கியோ சுப்பர்மிக்ஸ் ரெடி மிக்ஸ் கொங்கிறீற் போன்றன அடங்கியுள்ளதுடன், சீமெந்து சார் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளான டோக்கியோ சுப்பர்பொன்ட், டோக்கியோ சுப்பர்சீல் மற்றும் டோக்கியோ சுப்பர்காஸ்ட் ஆகியனவும் அடங்கியுள்ளன. உள்நாட்டு நிர்மாணத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த இவை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

முற்றிலும் உள்நாட்டு கூட்டாண்மை வர்த்தக நாமமான டோக்கியோ சீமெந்து குழுமம், உள்நாட்டு பெறுமதி தயாரிப்பில் நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக வளமூட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதில் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் விநியோகத்தில் நம்பிக்கையை வென்ற நாமம் எனும் நற்பெயரை எய்தியுள்ளதுடன், உயர் வாடிக்கையாளர் சேவையைக் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்காளர் எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT