Friday, May 17, 2024
Home » விவசாய திணைக்களத்தின் ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு

விவசாய திணைக்களத்தின் ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு

by sachintha
April 30, 2024 12:19 pm 0 comment

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள வம்மியடியூற்று கிராமத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் கலந்து கொண்டதுடன் பாடவிதான உத்தியோகத்தர்களான லக்ஸ்மன் மற்றும் மாறன் கிராம சேவை உத்தியோகத்தர், தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது பசளைப்பிரயோகம், விவசாய இரசாயனங்களின் முறையான பயன்பாடு, கொடித்தோடை நடுகை மற்றும் பராமரிப்பு என்பன தொடர்பான தெ ளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் கௌப்பி அறுவடையும் இடம்பெற்றது. விவசாயிகளுடனான கலந்துரையாடலில் விவசாயிகளின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதாக பிரதி விவசாய பணிப்பாளர் உறுதியளித்தார்.

 

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT