திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆவணங்களை பள்ளிவாசல்களின் நிர்வாகத்திடம் அவர் நேற்றுமுன்தினம் வழங்கி வைத்தார்.
நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆவணம் வழங்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி.ஏ. நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை மத்திய தினகரன் நிருபர்