லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை (26) நிந்தவூரில் நடைபெற்றது.இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப் பட்டது. இச்சந்திப்பில், இரு கட்சிகளதும் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)