228
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Shenhong மற்றும் அவரது பாரியார் ஆகியோர் எமது பாரம்பரிய மெத முலன இல்லத்திற்கு வந்து தன்னை சந்தித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
கொழும்பு தினகரன் நிருபர்