போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் செயற்படும் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள, சகஸ்யா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பிரதான காரியாலயம் பத்தரமுல்லை‘மகமெதுர’ கட்டிடத்தின் ஏழாவது மாடியில் திறக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அதிவேக நெடுஞ்சாலைத் தொகுதி மற்றும் அதன் வளங்கள் எதிர்காலத்தில் சகஸ்யா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது முழுமையான அரச நிறுவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.வீதி அபிவிருத்தி அதிகார சபை நீண்ட காலமாக அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து, பராமரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
தற்போதுள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையை மறுசீரமைப்பு செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ்,வீதி அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைத் தொகுதி நீக்கப்படவுள்ளது.