ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது.
இம்மாநாட்டின்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் கூட்டு பொறுப்பை வலியுறுத்தும் குறிப்பிடத்தக்க நெறிமுறைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில் பங்குபற்றிய இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே, பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.