100
புத்தளம் நகரை சேர்ந்தவரும், அமெரிக்கா நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடமை புரிந்து வந்தவருமான இளம் விஞ்ஞானி மஹ்ரூப் ரொஸ்மின் (38 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளத்தில் வபாத்தானார்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், வானியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அமெரிக்கா நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடமை புரிந்தும் வந்தவர்.
திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த இவரின் ஜனாஸா, நேற்று மாலை 04 மணிக்கு புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெருந்திரளானோர் இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
புத்தளம் தினகரன் நிருபர்