சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு (16) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தை. 2024ஆம் ஆண்டில் அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2023ஆம் ஆண்டு அதிகமான பயனாளிகளை இணைத்துக் கொண்டமைக்காக. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் களத்தில் கடமையாற்றும் 4 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர்களான ஏ.எம்.அமீன்,
வை.எம்.இனிகோ மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதருக்கு விசேட பாராட்டுப்பத்திரமும் சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர்களான ஏ.எம்.அமீனினால் வழங்கி வைக்கப்பட்டது.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)