Aberdeen Holdings, தனது கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடாக, சிநேஹதான அறக்கட்டளையை அறிமுகம் செய்துள்ளது. 2024 மார்ச் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக, சமூக நலன்புரிச் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்குவதற்கான நிறுவனத்தின் ஈடுபாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 3, 17ஆம் ஒழுங்கையில், சினேஹதான சமூக சமையலறையின் அறிமுகத்தினூடாக, இந்த அறக்கட்டளையின் முதலாவது பணி ஆரம்பமாகியது.
தற்போதைய நெருக்கடியான சூழலில், பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தார் எதிர்கொண்டுள்ள சிக்கல்களிலிருந்து ஓரளவேனும் நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, 100க்கும் அதிகமான குறைந்த வசதிகள் படைத்த மக்களுக்கு ஒவ்வொரு வேலைநாளிலும் போஷாக்கான இரவு உணவு வேளையை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்திருந்ததுடன், அதனூடாக உணவு பாதுகாப்பின்மையை தீர்ப்பதற்கு Aberdeen இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
தனது 14 துணை நிறுவனங்களினூடாகவும், 1300க்கும் அதிகமான ஊழியர்களினூடாகவும் இயங்கும் Aberdeen Holdings, தனது மனிதநேய சென்றடைவை மேலும் விஸ்தரிப்பதற்கு முன்வந்துள்ளது.
இந்த அறக்கட்டளையின் தூரநோக்குடைய நிகழ்ச்சிநிரலில், மேலும் பல சமூக சமையலறைகளை அறிமுகம் செய்வது, ஆபத்தில் உதவும் உணவு மற்றும் கல்வி, கர்ப்பிணி, சுகாதாரம் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு விசேடத்துவமான உணவு நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன வழங்கப்படுகின்றன.