சர்வதேச நாணய நிதியத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திகொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நலன்களை வழங்கக்கூடிய, மனிதாபிமான நிபந்தனைகள் அடங்கிய புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள வங்குரோத்து நிலை மீட்கப்பட்டு, அபிவிருத்திப் பாதைக்கு செல்லுமெனவும் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.