Monday, May 6, 2024
Home » டெல்வின் பெரேரா அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைவு

டெல்வின் பெரேரா அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைவு

by Gayan Abeykoon
April 24, 2024 8:15 am 0 comment

மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட துறைசார் நிபுணரான டெல்வின் பெரேராவை தனது நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளராக நியமித்துள்ளதாக அமானா வங்கி அறிவித்துள்ளது. 2024 மார்ச் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட டெல்வின், வங்கியியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். கொமர்ஷல் வங்கியில் ஆரம்பித்த இவரின் தொழில் வாழ்க்கை, பின்னர் செலான் வங்கியில் தொடர்ந்து, பிரதி பொது முகாமையாளராக பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் பல்வேறு தலைமைத்துவ நிலைகளில் பணியாற்றியுள்ளார்.

நுகர்வோர் வங்கியியல், வியாபார வங்கியியல், கடன் முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக நிதியியல் போன்ற பிரிவுகளில் டெல்வின் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகத்தின் மாஸ்டர் பட்டத்தை இவர் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் தகைமையையும் இவர் கொண்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் ரொட்டரி அமைப்பின் அங்கத்துவம் பெற்ற சமூக செயற்பாட்டாளராக டெல்வின் திகழ்கின்றார். ரொட்டரி இன்டர்நஷனல் மாவட்டம் 3220 இலங்கை மற்றும் மாலைதீவுகள் அடங்கலாக பல்வேறு தலைமைத்துவ நிலைகளை வகித்துள்ளதுடன், 2025/26 காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட ஆளுநராக செயலாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது பணிப்பாளர் சபை அங்கத்தவராக டெல்வினை அறிமுகம் செய்வது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். வங்கியியல் துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள டெல்வின், பெருமளவு அறிவு மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், எமது மூலோபாய இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கு இன்றியமையாததாக அமைந்திருக்கும். வங்கியியல் துறையில் அவரின் தொழில்நிலை மற்றும் சாதனைகள் போன்றன எமது அணியில் பெறுமதி வாய்ந்த சொத்தாக அவரை திகழச் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. எமது வங்கியின் வெற்றிகரமான செயற்பாட்டில் டெல்வினின் ஆழந்த செயற்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றன பெருமளவில் பங்களிப்புச் செய்யும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது பணிப்பாளர் சபைக்கு டெல்வினை வரவேற்பதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.” என்றார்.

இந்த நியமனத்துடன், அமானா வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களில், அஸ்கி அக்பராலி (தவிசாளர்), மொஹமட் அஸ்மீர் (முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), திஷான் சுபசிங்க (நிறைவேற்று அதிகாரமற்ற சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளர்), மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்திரி (நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளர்), தில்ஷான் ஹெட்டியாரச்சி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), சயித் மொஹமட் ஆசிம் ராஸா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹமட் ஹஸன் (நிறைவேற் றுஅதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), ஒமார் காசிம் (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), மொஹமட் ஆடமலி (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), கைருல் முஸமெல் பெரேரா பின் அப்துல்லா (நிறைவேறறு அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்) மற்றும் டெல்வின் பெரேரா (நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்) ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT