Monday, May 6, 2024
Home » கலவானை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை
சுமார் 07 கோடி ரூபா தங்க நகைகள்

கலவானை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை

by Gayan Abeykoon
April 24, 2024 8:19 am 0 comment

கலவானையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து 68,978,357 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய இரு சந்தேக நபர்களை நேற்று முன்தினம் (22) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி நிதி நிறுவனத்தில் கடமையாற்றுகின்ற விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கத்துக்கு பொறுப்பாக செயற்படும் அதிகாரி ஒருவரையுமே கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவர்கள் கலவானையில் வசிக்கும் 26, 33 வயதுடையவர்களெனவும் கூறினர்.

நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள், கைச்சங்கிலிகள், தோடுகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்க ஆபரணங்கள் மற்றும் சி.சி.ரி.வி. கட்டமைப்பின் டெகோடர் உபகரணத்தை இச்சந்தேக நபர்கள் திருடியதாக கலவானை பொலிஸாரிடம் மேற்படி நிதி நிறுவனத்தின் பதில் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT