Tuesday, April 30, 2024
Home » இஸ்ரேலுக்கான விமான சேவை நாளை ஆரம்பம்

இஸ்ரேலுக்கான விமான சேவை நாளை ஆரம்பம்

by mahesh
April 17, 2024 6:30 am 0 comment

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் இலங்கை பயணிகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து, வான்வெளி மூடப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளை (18) காலை கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு (Arkia) விமானம் ஒன்று வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். AIR-INDIA விமானங்களும் நாளை 18 முதல் புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் வரை மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகளும் இந்த விமானங்கள் மூலம் இஸ்ரேலை வந்தடைய முடியும். தற்போது விமானப் பயணச் சீட்டுகளைப் பெற்றுள்ள பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்வதற்கு முன்னர் மீண்டும் தமது பயணச்சீட்டை உறுதிப்படுத்துமாறும் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT