Tuesday, April 30, 2024
Home » கைதான நடிகை தமிதா மற்றும் கணவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கைதான நடிகை தமிதா மற்றும் கணவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

- வெளிநாட்டில் வேலை தருவதாக மோசடி செய்த வழக்கு

by Rizwan Segu Mohideen
April 17, 2024 1:28 pm 0 comment

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபர்களை ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்து ஏமாற்றியமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கயைம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல்

பிரபல சிங்கள நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT