பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினை தவிர்த்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்று (04) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிருந்தனர்.
அதன் பின்னரே அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கோட்டை நீதவான் திலிண கமகே தம்பதியினருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.